நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாத பசுந்தேயிலை விலை ரூ.18.39 ஆக நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்திருக்கிறது. மார்ச் மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்துள்ள பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய்.19.23 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.18.39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.