
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு வருகிற 19-ம் தேதி வரை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக இருப்பதன் இருக்கும்போது ஒரு சில இடங்களில் அசோகர்யமான சூழல் ஏற்படலாம். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.