ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக அரசு வந்ததிலிருந்து எங்கேயும் தூர்வாரவில்லை என்றும், பல இடங்களில் தண்ணீர் தேங்கிய படியே உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து திமுக அரசின் பிடியில் தமிழக மக்கள் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள் என்று கூறினார். வருகிற 2026ம் ஆண்டு அம்மாவின் ஆட்சி வந்தால்தான் இதற்கெல்லாம் முடிவு கிடைக்கும். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும், மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தான் முதலமைச்சராகவர்கள் என்றும் அவர் கூறினார்.