தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் மார்ச்  3-ம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஆனால் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியானது. இதற்கு தற்போது பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.