
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆறாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 14வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 13 வது தவணை பணம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி 14வது தவணை மே 15 ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் படத்தை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.