கரூர் மாவட்டத்தில் உள்ள பாப்பக்காப்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரும் கல்லுப்பட்டியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் மாமாவான சதீஷ்குமாருக்கும், பிரசாந்துக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த விக்னேஷ், முருகேசன், நாகராஜ், சக்திவேல், சதீஷ்குமார், பிரசாந்த் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.