தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறை அடுத்துள்ள பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யா தினேஷ் (32) என்ற மகன் இருக்கிறார். இவர் பொது இடத்தில் கட்டியை காட்டி மிரட்டியதாக கூறி காவல்துறையினர் கடந்து 8-ம் தேதி அன்று கைது செய்தனர். இதனால் அவரது தங்கைகளான மேனகா (31), கீர்த்திகா (29) ஆகியோர் தனது அண்ணன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், தனது அண்ணனை விடுவிக்குமாறு கூறி காவல் நிலையம் முன்பு காத்திருந்தனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர்கள் விஷம் குடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை முறையாக கையாளாமல் விட்டதாக கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமை காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகிய பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.