விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தானாங்குப்பம் கிராமத்தில் இருக்கும் முட்புதரில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூதாட்டி செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கன்னியம்மாள்(82) என்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது மூதாட்டியை எரித்து கொலை செய்து புதரில் உடலை வீசி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.