திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்பநல்லூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாபநாசம் முண்டந்துறையில் வன காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஷாஜகானின் மனைவி வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ஷாஜகான் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாஜகானின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.