திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜய அச்சம்பாடு மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்க ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் தங்கஜோதி வெளியூருக்கு சென்று விட்டார். ஒரு வாரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்து ஆறுமுகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.