
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் செல்லபுள்ளகரடு பகுதியில் முருகேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேஷ் சம்பவம் நடைபெற்ற அன்று தனியார் தோட்டத்திற்கு குடிபோதையில் சென்றார்.
இதனையடுத்து அங்கிருந்த கிணற்றின் மீது அமர்ந்திருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.