நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா பஜார் பகுதியில் கதீஜா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தின் கிளை முறிந்து கதீஜாவின் தலை மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.