திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய குளத்தில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முத்தையாவின் பழக்கடைக்கு டேரன்ஸ் என்பவர் வந்து தர்பூசணி வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த பழம் அழுகி இருந்தது. இதனால் பேரன்ட்ஸ் தனது நண்பர் மாரி ராஜாவுடன் கடைக்கு சென்று முத்தையாவிடம் பழத்தை காண்பித்துள்ளார்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த டேரன்ஸ் அரிவாளால் முத்தையாவை வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.