கரூர் மாவட்டத்திலுள்ள வசுமதிபுரத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவகுமாருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 3- ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற சிவகுமார் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வசுமதிபுரம் பகுதியில் விஷம் குடித்து சிவகுமார் மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.