விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராம்பக்கத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் லாரி டிரைவரான சரவணன் வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றார். இதனால் தீபா தனது கணவரை செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் சரவணன் செல்போனை எடுத்து பேசவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த தீபா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீபாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.