
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்கடவு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகவேல்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகவேலை பவித்ரா கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோபத்தில் பவித்ரா தனது குழந்தையுடன் கோவையில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து முருகவேல் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.