சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், போலீஸ்காரர் பாலாஜி ஆகியோர் வாகன ஓட்டிகளை பிடித்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோ குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஜெய்சங்கரும், பாலாஜியும் லஞ்சம் வாங்கியது உறுதியானது.
இந்நிலையில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், போலீஸ்காரர் பாலாஜி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.