அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இன்று 30-ஆம் தேதி முகூர்த்த நாள். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும் பிற மாவட்டத்திற்கும் ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டு இருப்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நாகர்கோவில், சேலம்* ஈரோடு* திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல இன்று 355 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதே போல சனிக்கிழமை 360 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று 75 கூடுதல் பேருந்துகள் திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகை, பெங்களூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு செல்லும். சனிக்கிழமை 75 பேருந்துகள் மேற்கூறிய இடங்களில் இருந்து இயக்கப்படும்.

இதே போல பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்குச் செல்ல 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து இன்று 20 பேருந்துகளும், நாளை 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.