ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற ஏராளமான மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த படகுகள் இலங்கையில் ஊர்காவல்துறை, காங்கேசன் துறை, மன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டில் பல்வேறு காலகட்டங்களில் பிடிபட்ட தமிழகத்தை சேர்ந்த 8 படகுகளை தங்கள் நாட்டு அரசுடைமையாக்கி  ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

எனவே இந்த 8 படகுகளில் ராமேசுவரத்தை சேர்ந்த 4 விசைப்படகுகள், மண்டபத்தை சேர்ந்த 1 படகு, ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 2 படகுகள் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 1 படகும் இதில் அடங்கும். அதே நேரம் ராமேசுவரத்தை சேர்ந்த 3 விசைப்படகுகள்,ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 1 விசைப்படகு உள்ளிட்ட 4 படகுகளை அந்த நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்ட நிலையில், இத்தனை நாட்கள் பராமரித்து பாதுகாத்து வந்ததற்காக தொகை செலுத்த வேண்டும். மேலும் அதனை மார்ச் மாதம் 14-ஆம் தேதிக்குள் அந்த படகின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில்  அபராதமாக செலுத்தினால் மட்டும் இந்த படகுகள் கொடுக்கப்படும். இவ்வாறு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.