ஒடிசாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சார்பில் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சி அங்குள்ள இந்திரவாதி ஆற்றில் நடத்தப்பட்டது. இதில் இரண்டு புதிய மீன் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மீன்கள் கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பின் அங்கு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் அவை மஹசீர் கெண்டை வகையைச் சேர்ந்த மீன்கள் என்று அடையாளம் காணப்பட்டது. இந்த மீன்களை புதிய மீன் இனங்களாக அங்கீகாரம் அளிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மீன்களுக்கு அறிவியல் பெயர்களான ‘டோர் டோர்’ மற்றும் ‘டோர் புட்டிடோரா’ என பெயரிடப்பட்டுள்ளது.