ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் குடமுழுக்கு செய்யப்பட்ட தினம் தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர தினம் என்று கூறினார். இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோன்று இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள தேசத்தின் முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இது தேச விரோதம் நான் இதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த ஆபத்தான கருத்தை அவர் நிச்சயமாக திரும்பப் பெற வேண்டும். இது வரலாற்றை திரிக்கும் முயற்சி. நமது சுதந்திரத்தை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இந்தியாவுக்காக எங்கள் உயிரையும் தியாகம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இந்த கருத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்று அவர் குற்றம் சாட்டினார்.