சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் சீன அதிபர் ஜின் பின்கை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கிழக்கு லடாக்கில் ரோந்து மற்றும் படை விலகல் தொடர்பாக முடிவு பேசப்பட்டது. பின்னர் லடாக்கிய எல்லையில் இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெற்று வருகின்றனர். இருநாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பை ரஷ்யா வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறுகையில், மோடி-ஜின் பிங்க் சந்திப்பில் நாங்கள் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை.  ஆனால் ரஷ்யாவில் நடந்து இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சந்திப்பை முழு மனதோடு வரவேற்கிறோம் என்று தெரிவித்ததோடு எல்லை பிரச்சனை தொடர்பான சீனா- இந்தியா ஒப்பந்தம் இருநாட்டு உறவில் ஒரு நேர்மறை முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.