
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் திருடன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்தான். அப்போது திருடுவதற்கு முன் அனுமன் சிலையை 5 முறை வணங்கினார். அதன் பிறகு தான் கதவை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை திருடினார்.
அதன் பின் வெளியே வந்த அவர், மீண்டும் 5 முறை வணங்கி விட்டு அங்கிருந்து சென்றார். இந்நிலையில் மறுநாள் காலை கோவில் பூசாரி உண்டியலில் இருந்த பணம் காணாமல் போனதை அறிந்து புகார் அளித்தார். அந்த புகாரின் படி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து , திருடனை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.