கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அன்சாரி வீதியில் சரவண பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் தருண் (13) பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த தருணை விஜயலட்சுமி கண்டித்து டிவி ரிமோட்டை பிடுங்கி வைத்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.