
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த கணேஷின் தாய் கலையரசி தனது மகனை கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.