
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தவமணி முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட தவமணி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் வயிற்றுவலி குணமாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த தவமணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தவமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.