காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி உயிரினங்களுக்கும் வரும் என்பதை இந்த வீடியோ உணர்த்தியுள்ளது. அதாவது ரஷ்யாவில் உள்ள சிஹோடா மலைப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. அதில் ஒரு புலி ஆண், மற்றொரு புலி பெண். ஆண் புலிக்கு போரீஸ் என்றும் பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்றும் பெயரிடப்பட்டது. தனித்தனியாக தங்களுடைய எல்லையை பகிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக இந்த 2 புலிகளையும் பிரித்தனர். அதாவது ஆண் புலியை 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சைதிரியா என்ற வனப்பகுதியில் விட்டனர்.

ஆனால் அந்த புலி தனது இருப்பிடத்தை நோக்கி பயணம் செய்ய தொடங்கியது. அதே நேரம் துணையை பிரிந்த ஸ்வேத்லயா வேற எங்கும் செல்லாமல் விட்ட இடத்திலயே சுற்றியது. இந்த புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் போரீஸ் 3 ஆண்டுகள் பயணம் செய்து பெண் புலி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது. தற்போது 6 ஆண்டுகளாக இந்த 2 புலிகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவற்றின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.