தமிழகத்தில் தற்போது தேங்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அதாவது கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பற்றாக்குறை காரணமாக தேங்காயின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தேனி, சின்னமனூர், வாடிப்பட்டி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் இருந்து தேங்காய் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் வரத்து குறைவால் தேங்காய் விலை ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த விலை சில வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.