
மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் இருந்து வருகின்றார். இவரும் 12 வயது சிறுமியும் பேச்சு வழக்கில் பேசிய நகைச்சுவையான உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் போபாலில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பு சிறுமி ஒருவருக்கு கிடைத்துள்ளது. பெரிய பங்களாவில் மயங்கிய சிறுமி வீடியோவை தொடங்கும் போது முதல்வர் மாளிகைக்கு தனது முதல் வருகையில் உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மோகன் யாதவ் தனது இல்லத்தில் நடத்திய வட்டமேஜை மாநாட்டின் கூட்டத்தின் போது வீடியோ எடுக்கப்பட்டது. அப்போது சிறுமி முதல்வர் யாதவை “ராம் ராம் முக்ய மந்திரி ஜி” என்று வாழ்த்துவதுடன் உரையாடலை தொடங்குகின்றார். இதனை கேட்டவர்கள் சிரிப்புடன் சிறுமியுடன் உரையாடுவதை தொடங்கினர்.
அதில் இதற்கு முன்பு என்னை பார்த்து இருக்கிறீர்களா என்று சிறுமி கேட்க அதற்கு முதல்வர் இப்போது எனக்கு பயமாக இருக்கிறது என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். முதல்வரிடம் அவரது பிரம்மாண்ட பங்களாவால் ஈர்க்கப்பட்டதாக சொல்லும் சிறுமி, இதுபோன்று எதையும் நான் பார்த்ததில்லை இது என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது என்றும் கூறுகிறார். மேலும் தொடர்ந்து தனது வீடியோவை விரும்பி பகிருமாறு மக்களை கேட்டுக் கொள்ளுமாறும் முதலமைச்சரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து youtube-க்கு லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க என்றும் கூறி இருக்கிறார். எந்த பயமும், அச்சமும் சிறிதும் இல்லாமல் 12 வயது சிறுமி முதல்வரிடம் பேசுவதும் மோகன் யாதவும் அதற்கு ஜாலியாக சிரித்தபடியே பதில் அளித்ததும் பார்ப்பவரை மகிழ செய்துள்ளது.