
தி.மு.க தோழமை கட்சிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருவதாகவும், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான நிதியை தருவதில் பாரபட்சம் பதவிக்காலம் முடிந்து போன ஆளுநரை வைத்துக்கொண்டு அத்துமீறல், மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறு கொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓர் அணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திட மோடி அரசு முயற்சி செய்கின்றது. வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசை கண்டித்து முதற்கட்டமாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கிற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என்றும் திமுக தோழமை கட்சிகள் தெரிவித்துள்ளன.