புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து என்னும் பகுதியில் புகழ்பெற்ற பார்வதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில தரகர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தார் கார்த்திக் ஆகியோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தியதில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதோடு கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் விசாரணையின் போது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜான்சனை கடந்த 10-ம் தேதி காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தியதோடு சிறையிலும் அடைத்துள்ளனர்.

அதோடு பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதல் கட்ட விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சனை சஸ்பெண்ட் செய்ய கவர்னர் உத்தரவிட்டார். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரிடம் சினிமா பானையில் விசாரணை நடத்தியதில் அவர் லஞ்சமாக பல லட்சம் ரூபாய் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி அவர் உல்லாச வாழ்க்கை, குடும்பம், மருத்துவ செலவு மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் விசாரணையின் போது 2 நாட்களாக எதுவும் தெரியாது என்று கூறிய அவரிடம் காவல்துறையினர் உண்மையை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.