ராமநாதபுரம் மாவட்டத்தில் சுபாஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8மாதம் முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுபாஷ் கீழக்கரையில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சுபாஷ் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம் பெண் திருமணமான 8 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.