
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இதில் மொத்தம் 145 பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு முன்பாக இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டனர். உடனடியாக விமானத்தை நிறுத்திவிட்டு கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர், விமான புறப்படும் என்று தெரிவித்தனர். மேலும் சரியான நேரத்தில் விமானத்தை நிறுத்தியதால் 145 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.