கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்ச வேலம்பட்டியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன்னை குடும்பத்தினர் கவனிக்கவில்லை என கூறி குடிபோதையில் ஆறுச்சாமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த ஆறுச்சாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.