தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க வைக்க மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும், 6 முதல்8ம் வகுப்பு வரை 6000 ரூபாயும், 9-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 8000 ரூபாயும், பட்டப் படிப்புக்கு 12000 ரூபாயும், முதுகலை பட்டத்திற்கு 14000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை என்ற புதிய திட்டத்திற்கு கீழ், பிஎச்டி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1,00,000 ரூபாய் வீதம், 50 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்பட உள்ளது என மாற்றத்திறனாளிகளின் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன் கூறியுள்ளார்.