ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் முடக்குவாத நோயான போலியோவை தடுக்க முடியாத நாடாக உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடைக்கான காரணங்கள் என்ன என்று தெரியவில்லை என கூறப்படுகிறது.

தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் கருத்து தெரிவிக்க வில்லை. இதை  தொடர்ந்து அண்டை நாடான பாகிஸ்தானில் போலியோ எதிர்ப்பு பிரச்சாரங்களால் வன்முறைகள் ஏற்படுகின்றன. இதில் பயங்கரவாதிகள் தடுப்பூசி குழுக்கள் மற்றும் அவர்களை பாதுகாக்க நியமிக்கப்பட்ட காவல்துறையினரை குறி வைத்து தாக்குகின்றனர். ஆனால் இது போன்ற பிரச்சாரங்கள் குழந்தைகளை கருத்தடை செய்வதற்காக மேற்கொண்ட சதி என கூறப்படுகிறது.