
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் மூலமாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெரும் வசதி கடந்த 2023 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தங்களது இருப்பிடத்திற்கு அருகே உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது www.tn.e.sevai என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து கட்டணமில்லா பயண அட்டையை பதிவிறக்கம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.
மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 2025-26 ஆம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக புதுப்பிக்க ஏதுவாகவும், மேலும் இந்த வசதியினை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பயனாளிகள் பயன்பெறும் வகையில் இதர 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் விரிவுபடுத்த ஏதுவாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31.3.2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லாப் பயண அட்டைகளை 30.6.2025 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.