
கரூர் மாவட்டம் குளித்தலையில் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் திறந்து வைத்துள்ளார். இங்கு குழந்தைகள் கற்பதற்காக தேசியக்கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது.
அதில் கொய்யா பழத்திற்கு கோய்யா பலம் என்றும், வெண்டைக்காய்க்கு வெட்டக்காய் என்றும், வாழைப்பழத்திற்கு வாழைப்பலம் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதோடு தர்பூசணிக்கு தர்புசணி என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் ஆங்கில மாதங்களும் தவறாக எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்ட எம்.எல்.ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு இப்படியா தவறாக எழுதுவது என்று பெற்றோர்களும் ஆதங்கப்பட்டனர். பின்னர் அந்த பிழைகளை திருத்த அறிவுறுத்தப்பட்டது.