ஒடிசாவின் முன்னாள் முதல்வராக பிஜு பட்னாயாக் இருந்தார். இவருடைய சிலைக்கு நேற்று தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த பிஜு பாட்நாயக், நவீன் பாட்நாயக்கின் தந்தை ஆவார். இவர் 1961, 1963, 1990, 1995 போன்ற காலகட்டங்களில் ஒடிசாவின் முதலமைச்சராக இருந்தார். நேற்று அவரது நினைவு தினம் என்பதால், அங்குள்ள அவரது சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை மற்றும் போலீசார் தீயை அணைத்து சிலையை பாலித்தீன் கவரால் மூடி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் பாஜக அரசு விமர்சித்து இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து உள்ளது. அக்கட்சியின் தொண்டர்கள் புவனேஸ்வர் விமான நிலையம் அருகே நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்ட தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார். முன்னதாக பிஜூ பட்னாயாக் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.