உத்திரப்பிரதேசத்தில் கான்பூரில் இருந்து பிரயக்ராஜுக்கு நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 5 மணிக்கு தண்டவாளத்தில் சமையல் எரிவாயு கிடப்பதைக் கண்ட சரக்கு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உடனே அவசரமாக ரயிலை நிறுத்த பிரேக் பிடித்தார். அப்போது ஜஸ்ட் மிஸ்ஸில் சிலிண்டருக்கு மிக அருகில் சென்று நின்றுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பிரேம்பூர் ரயில் நிலையம் அருகே இருந்த 5 கிலோ சமையல் எரிவாயுவை தண்டவாளத்திலிருந்து அகற்றினர். மேலும் இச்சம்பவம் குறித்து ரயில்வே துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சாதுரியமாக செயல்பட்ட சரக்கு ரயில் ஓட்டுநரை அதிகாரிகள் பாராட்டினர்.