
கேரளா மாநிலம் கோழிக்கோடு பந்திரங்காவு அருகே உள்ள பகுதியில் அன்சிலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் பந்திரங்காவு அருகே உள்ள தைவாலத்து என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இவரது சகோதரர் முந்திச் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் லாரி டிரைவர் தனக்கு முன்னாள் சென்ற காரை முந்த முயற்சித்தார். இதனால் இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் லாரி மோதியது.
இதில் தவிர விழுந்த அன்சிலா, லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இதனால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரர் லேசான காயங்களுடன் உயிர் தரப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.