ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்தியாவுக்காக வேகமான சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவரது அதிரடி பேட்டிங் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது மட்டுமின்றி, கிரிக்கெட் கடவுளாக மதிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பாராட்டையும் பெற்றுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி தனது அபார இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 35 பந்துகளில் சதம் விளாசினார். கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்த சாதனையின் பின்னால் இரண்டாவது வேகமான சதம் அடித்த வீரராக வைபவ் இடம்பிடித்துள்ளார்.

இதற்காக அவர் முன்னதாக யூசுப் பதானின் 37 பந்துகளில் சதம் அடித்த சாதனையை முறியடித்தார். போட்டியின் ஆரம்பத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 209 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களில் வெற்றியைப் பதிவு செய்தது. இஷாந்த் சர்மா வீசிய ஓவரில் மட்டும் வைபவ் 28 ரன்கள் குவித்தார், மேலும் வாஷிங்டன் சுந்தர் பந்தில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 50 ரன் மைல்கல்லை எட்டினார்.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த வைபவுக்கு 10 லட்சம் ரூபாயை பீஹார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் பரிசாக வழங்கினார். 14 வயதான சூரிய வன்சியின் திறமை மற்றும் கடின உழைப்பை பாராட்டி நிதீஷ் குமார் இந்த பரிசு தொகையை அறிவித்துள்ளார்.