
நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன் இருந்த கிளீனர் பாபுவும் போதையில் இருந்தார். இந்நிலையில் மது போதையில் ஓட்டுநர் இருந்ததால் கவனக்குறைவால் அருகிலிருந்த ஒரு மின் கம்பத்தில் மீது மோதினார்.
இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக டிரைவர் முருகன் மற்றும் பாபுவை மடக்கிப்பிடித்து அவர்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் கைது செய்தனர். அதோடு சரக்கு லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தால் இல்ல பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.