திமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி தந்தை பெரியாரின் உடைய சிலையை நம்முடைய ஒப்பற்ற  தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார். முந்தைய நாளில் பெரியார் சிலையை உடைச்சுட்டாங்க ஸ்ரீரங்கத்தில்….  வெண்கலத்தில் செய்யப்பட்ட சிலை அல்ல…. அந்த  சிமெண்ட் சிலையை உடைத்து விட்டார்கள்..  இரவோடு இரவாக உடைத்து  விட்டார்கள்…  முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு அந்த செய்தி வருகிறது…

தன்னுடைய விரலில் இருந்த குண்டூசியால் குத்தி ரத்தம் வர வைத்து, தி.கா கொடியை உருவாக்கியவர் நம்முடைய தலைவர்…  அவர் முதலமைச்சராக உட்கார்ந்திருந்த போது கூட நான் எதற்கு சொல்கிறேன் என்றால்,  அந்த உணர்வு…  பெரியாரின் சிலையை உடைத்து விட்டார்கள்  என்று சொன்னவுடன்,  குறிப்பிட்ட அந்த நேரத்துக்குள் வெண்கல சிலை வைத்து,  குறிப்பிட்ட அதே டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பெரியாரின் சிலையை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்னால் திறந்து வைத்தவர் தான் கலைஞர்.

அப்படிப்பட்ட கட்சிக்காரர்கள் ஆகிய நம்மிடத்திலே…..  இன்னைக்கு எவன் எவனோ சவால் விட ஆரம்பிச்சுட்டான். அதற்கு காரணம் நம்மிடத்திலே பழைய மாதிரி இல்லை. அந்த உணர்வு போயிடுச்சு… அந்த உணர்வு போனதற்கு காரணம்… நம்முடைய இலக்கியங்கள்… நம்முடைய வரலாறு…. இதையெல்லாம் இளைய சமுதாயத்திற்கு கொண்டு போய் சேர்க்கவில்லை…. அதற்கு எல்லோரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்  தெரிவித்தார்.