இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றது. இந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இருப்பினும் இந்த படம் கடும் எதிர்ப்புக்கு இடையே திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படம் நாளை (மே.8) முதல் திரையிடப்படாது என்று மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று மால்களிலுள்ள திரையரங்குகளில் மட்டுமே இந்த படம் திரையிடப்பட்ட சூழலில், நாளை முதல் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இம்முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.