விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜுனா. அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால், கட்சியில் இருந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியலை தொடங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

அதை கூறியதற்கு தான் என்னை இடை நீக்கம் செய்தனர். இந்த கொள்கையை என்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பிரச்சாரத்தில் கண்டிப்பாக உருவாக்குவேன். எங்கு இணைய வேண்டும் என்பதை விட நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து வருகிறேன். மேலும் எதிர்கால திட்டம் என்ன என்பதை குறித்து விரைவில் செய்தியாளர்களிடம் அறிவிப்பேன் என்று அவர் கூறினார்.