
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும். வெயில் நேரத்தில் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.