தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் சாலையில் நாளை நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன. அதேபோல திருச்சியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றி  விடப்படுகின்றன. போக்குவரத்து மாற்றம் காரணமாக 15 முதல் 20 கிலோமீட்டர் தூரம் பயண நேரம் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் மாநாடு மேடை பகுதி முக்கிய சாலையை ஒட்டி அமைந்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே ஜிஎஸ்டி சாலையில் தற்போது போக்குவரத்தை தவிர்க்க காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளன. அதோடு இந்த மாநாட்டிற்கு 2 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 50 ஆயிரம் நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தவெக மாநாட்டில் முன்னெச்சரிக்கார் 17 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள், 100 சுகாதாரப் பணியாளர்கள், 22 ஆம்புலன்ஸ்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.