
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேற்று முளைத்த மழையில் பெய்த விஷ காளான் என்று விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன். நான் கடந்து வந்த பாதை யாருக்கும் தெரியாது என்று தனக்குத்தானே character certificate கொடுத்துக் கொள்ளும் எதிர்கட்சித் தலைவரே, நீங்கள் சொன்ன அந்த சேக்கிழ இராமாயணத்தை எப்போது தருவீர்கள். நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களை எப்போது தருவீர்கள். ஊர்ந்து போய் பதவி படித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும் விஷ ஜந்துக்களுக்கு நாங்கள் விஷ காளான்கள் தான்.
அதிமுக ஆட்சிக்காலத்தின் போது முன்பு அம்மா உணவகம், அம்மா உப்பு என்று பெயர் சூட்டியது தவறில்லை. ஆனால் 94 வருடங்களாக தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உழைத்த கலைஞர் கருணாநிதியின் பெயரை திட்டங்களுக்கு வைத்தால் மட்டும் தவறா. இது தொடர்பாக நான் விளக்கம் கொடுத்ததை எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை. உங்கள் கட்சி பெயரில் உள்ள திராவிடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிய அறிஞரை கண்டுபிடித்து விட்டீர்களா. இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு பிறகு என்னை விமர்சிக்க வாருங்கள். மேலும் வெற்றி வார்த்தைகளும் வீண் சவடால்களும் எங்களை ஒருபோதும் தடுக்காது.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்னை மட்டும் இன்றி எந்த துறையில் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களை அவர் பாராட்டி வருகிறார். தன்னை பாராட்ட ஆள் எதுவும் இல்லை. மேலும் தான் பாராட்டவும் அதிமுகவில் யாரும் இல்லை என்ற விரக்தியில் தான் எடப்பாடி பழனிச்சாமி இப்படி எல்லாம் பேசுகிறார். மேலும் சமூகநீதி கொள்கையால் வளர்த்தெடுக்கப்பட்ட எங்களை பார்க்கும்போது சிலருக்கு ஆத்திரம் வருவது இயல்புதான் என்று கூறியுள்ளார். கை ரிக்ஷாவை ஒழித்தது முதல் கம்ப்யூட்டர் கல்வியை தந்தது வரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய நம் கலைஞர் அவர்களின் பெயரை அரசு திட்டங்களுக்கு சூட்டுவதும் சிலைகள் எழுப்புவதும் நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையின் வெளிப்பாடு.
நன்றி என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இது புரியாது. யார் காலை பிடித்து முதலமைச்சர் ஆனாரோ அவர் காலையே வாரிவிட்டவர். அவர் நன்றி உணர்ச்சி பற்றி தெரியாத காரணத்தினால் இப்படி எல்லாம் பேசுகிறார். அவர் வேண்டுமானால் அவர் ஊர்ந்து சென்ற டேபிள் மற்றும் சேருக்கு சிலை வைத்துக் கொள்ளட்டும். நாம் நம்மை ஆளாக்கிய கலைஞருக்கு சிலை வைப்போம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டிருந்தார்.
அதற்கான பதிலை இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் கூறியிருந்தேன். அதிலும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சித்…
— Udhay (@Udhaystalin) November 17, 2024