
துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா எல்லையில் உணரப்பட்டுள்ளதும் இதனால் இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் இடித்து மலை போல குவிந்து கிடக்கிறது.
இன்னும் பல கட்டிடங்கள் இடிந்து விடும் அபாயத்தில் இருக்கிறது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக தூங்கிக்கொண்டிருந்த மக்கள் தப்பிக்க வழி இல்லாமல் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். தற்போது வரை துருக்கியில் நிலநடுக்கத்தால் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி இன்னும் நடந்துகொண்டிருக்கும் நிலையில் தினம் தினம் வெளியாகும் ஒவ்வொரு வீடியோவும் பார்ப்போரை மனம் கலங்க வைக்கிறது. இந்நிலையில் மீட்பு பணியினர் குழந்தை ஒன்றை மீட்டுள்ளனர். அப்போது அந்த குழந்தை மகிழ்ச்சியில் அவர்களை நீ தான் என்னை காப்பாற்றினாயா? என்பது போல கட்டி தழுவுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் துக்கத்திலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Miracles are repeated and voices embrace the sky again.
Moments filled with joy as the child Karam was rescued from the ruins of a destroyed house in the village of Armanaz in the countryside of #Idlib, #Syria on the first day of the #earthquake. pic.twitter.com/eec9Ws91kn— The White Helmets (@SyriaCivilDef) February 8, 2023